புதன், 23 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016




ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால்  நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள்





கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-24-12-2015 தொடங்கி 24-01-2016 வரையான காலம் இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்

 மற்றவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய தலைப்பு -
பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்

போட்டியின் நெறிமுறைகள்

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் 
24-01-2016 ,இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

-நன்றி-
-அன்புடன்-
 -ரூபன்-

திங்கள், 9 நவம்பர், 2015

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015




முதலாம் இடம் வந்த கவிதை

அரைநிர்வாணமாய் _தமிழும்.
அதிகாரவர்க்கமாய் சிங்களமும்.
புதிரான தலைக்கனங்களும்.
புத்தத்தின் விகாரையும்.
பௌத்தத்தின் கலசங்களும்.
அடிமைக்கு அரைவட்டக்கல்லும்.
ஆட்சிக்கு சிகிரியாக்குன்றும்.
அடிமையின் பச்சை இரத்தமாய்.
தேயிலைத்தோட்டமும்.
வறுமைக்காய் வசைபாடும் கிழிகளும்.
நீதி கேட்டு ஒழிந்துகிடக்கும்.
ஆறாவது நூறும்.
குருதி ஊற்றி மனிதம் கலந்த!
செம்மஞ்சளாய் ஜொலிக்கிறது
நாகதீவின் நூறு ரூபாய்.

கவிதையாக்கம்
 சொற்சிற்பிசபா.

----------------------------------------------------------------------------------


இரண்டாம் இடம் வந்த கவிதை


நூ()று ரூபாய் நோட்டு…!!!

மொழிகளின் பேதம் எதுவுமில்லை;
இல்லாத நாடுகள் எங்குமில்லை!
வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லை;
எண்ணம்மட்டும் மதிக்கப்பெறும்!
வியர்வையின் ஈரம் பார்த்ததுண்டு;
ரத்தத்தின் கோரம் சுவைத்ததுண்டு!
இதயங்களின் அருகில் இடமுண்டு;
()வனையும் ()மாற்ற திறமுண்டு!
எட்டாத உயரமென யாதுமில்லை;
இதனை விரும்பாது எவருமில்லை!
குழந்தையும் வீசும் குப்பைத்தொட்டி-
இதுவரை காண வாய்க்கவில்லை!
பிணமும் வாய் திறக்கச்செய்யும்-
பணம் - பத்தும்கூட செய்துவிடும்;
இப்பணம் - ‘நூ()றும் செய்யக்கூடும்!

கவிதையாக்கம்-
மாயவரத்தான்..எம்.ஜீ.ஆர்

-----------------------------------------------------------



மூன்றாம் இடம் வந்த கவிதை.

-----------------------------------------


சீயாய் நாணயம்
உற்று நோக்கினால் மட்டுமே
தெரியும் தமிழ்சொற்கள்
இரண்டு.

வடக்கு,கிழக்கில் வசிக்கும்
நம் தமிழினம் போன்று.

கிளிகள் காதல்மொழி பேசும்
தேன்கூடு தேசத்தில்
தேயிலை பறிக்கும்
தோழிகளுக்கு தெரியுமா?

தாய்நாட்டின் திசைநோக்கி
ஏங்கும்
அகதி வாழ்க்கை.

தொலைந்துபோன
புத்தனின் வாய்மொழி
பாதுகாப்பாய்...
பேழைக்குள்.

உறைந்துவிட்ட குருதி.
மலையக மக்களின்
வியர்வை சிந்திய செம்மண்.
சுற்றித்திரியும்
தவிட்டு்க்குருவி.

இவற்றுள்
எந்த நிறம்
இந்த சீயாய் நாணயம்?

கவிதையாக்கம்
திரு.இன்பா


முதலாம்.இரண்டாம். மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கான 

பதக்கம்+சான்றிதழ் அவர்களின் முகவரிக்கு வந்து கிடைக்கும். தபாலில்.


ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம்.

+புதுவை பிரபா.
+கிரேஸ் பிரதீபா.
+J.NIRMALA.CHRSTIN
+பி.எம்.கமால் கடைய நல்லூர்

இவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்.
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் சரியான முகவரியை ஊற்று மின்னஞ்சலுக்கு ootru2@gmail.comஅனுப்பும் மாறு தயவாக
வேண்டிக்கொள்கிறேன்.

நடுவராக கடமையாற்றிய..

கவிஞர் ரமணிஐயா.
திண்டுக்கல் தனபாலன் அண்ணா.
யாழ்பாவாணன் அண்ணா.
இவர்களுக்கு ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
அன்புடன்
ஊற்று நிருவாக குழுவினர்.