செவ்வாய், 22 மார்ச், 2016

ஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்!

போட்டி என்றால்
பெரும் சுமையல்ல - சும்மா
பங்கெடுப்பதே வேலை!
பங்கெடுத்துப் பரிசில் பெற்றால்
வெற்றியின் அடையாளம் - ஆனால்
பரிசில் பெறாவிட்டால்
வெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக
தோல்வியடைந்தவர்கள் என்று
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போரே
தோல்வியாளர்கள் என்பேன்!

இப்படியெல்லாம் சொல்லாமலே
போட்டிகளில் பங்கெடுப்போரைப் பாராட்டுவோம்!
இப்படியெல்லாம் சொல்லியும் கூட
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போருக்கு
போட்டி அறிவிப்புகள்
போட்டி பற்றிய தகவல்
எட்டாமல் இருக்கலாம் தானே!

ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
நாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்
வெளிவந்த வண்ணம் இருக்கே...
ஆயினும்,
வலைப்பதிவர்கள் தமது தளத்தில்
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
வெளியிட்டு உதவினால்
போட்டிகளில்
பங்கெடுக்காமல் இருப்போரை
போட்டிகளில் பங்கெடுக்கச் செய்யலாமே!

மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
தங்கள் தளத்தில் பகிர
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றிய
தகவலைப் படிக்க உதவும்
இணைப்பைக் கீழே தருகின்றேன்!

வழி-01


<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html"><img border="0" src="https://2.bp.blogspot.com/-VSmCwUDq2go/Vt2wSIJgYtI/AAAAAAAAAFo/_YLGap_Y2Cw/s640/kl.jpg" width="200" height="300"></a></p>

வழி-02
http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html

<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html">http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html</a></p>


மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
மேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில் பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.

திங்கள், 7 மார்ச், 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்



கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016 
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள்.

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
ootru2@gmail.com
போட்டிக்கான நடுவராக.
1.கவிஞர்.ரமணி(ஐயா)-இந்தியா
2.கவிஞர்..பச்சைப்பாலன்-மலேசியா
3.அறிஞர்.யாழ்பாவாணன்-இலங்கை
4.வலைச்சித்தர்.தனபாலன்-இந்தியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் மிக விரைவில் வந்தடையும் வெளியூர் சென்றதனால் தாமதமாகிவிட்டது... உறவுகளே. 

-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்
-கவிஞர்.த.ரூபன்-